Tuesday, June 26, 2007

சுரம் தப்பிய முரசொலி

உமது முரசொலியால்
எமது மக்களின் காது கிழிகிறது..

உமது தலைவனின் கரங்கள்
பாஜகாவுக்கு பல்லக்குத் தூக்கிச் சிவந்ததா
மாஞ்சோலை தொழிலாளியின் ரத்தத்தால் சிவந்ததா?
பட்டிமன்றம் வைப்போம் பாப்பையாவைக் கூப்பிடுங்கள்.
பெரியார் கனவில் சொன்னாரோ
மோடியோடு கூடிப்புணர?

பெரியார் உங்கள் முகவரியல்ல
உமது தலைவன் உங்கள் நெற்றியில் போட்ட மூவரி!

நீர் சொன்னது சரிதான்
கொள்கைக்காகவல்ல பதவிக்காகவே கொலைகள் -
கண்ணகி நேசரல்லவா?
அது தான் மதுரை எரிகிறது போலும்

"தவறான கட்சியின் நல்ல மனிதர்!"
சுதந்திரப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்த வாஜ்பாய்க்கு
பெரியாரைக் காட்டிக் கொடுத்தவரின் சான்றிதழ்!
வெகுபொருத்தமிப் பொருத்தம்

அட,
இன்னுமெதற்கந்த முகமூடி?
அழுகி நாறும் உங்கள் முகத்தைக் கொஞ்சம் காட்டுங்களேன்..

4 comments:

said...

இரத்தம் தேடி இங்கு நுழைந்த பாப்பார நரியே,

எங்களுக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடு இருந்தாலும், உனக்குப் பாடைகட்ட மட்டும் எப்போதும் கருத்து ஒற்றுமைதான்..

எனவே.... பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்..

அடுத்த முறை வரும் போது குடுமியை மறைத்து கேப் போட்டு வரவும்

Anonymous said...

செங்கொடிச்சிங்கமே,நீ என்னை திட்டினாலும் சரி, கொட்டினலும் சரி........வெட்டிப்பயலுக வெட்டிக்கிட்டுசாவுரத பார்க்காமலா போகப்போறென் நானு....

Anonymous said...

தோழர் கேடயத்தின் சரவெடி கட்டுரை

****************

மாமா வீரமணியும் மயங்கிக் கிடக்கும் மாப்பிள்ளைகளும்

http://kedayam.blogspot.com/2007/06/blog-post_930.html

ஜனநாயகம் முற்போக்கு என்று வலம் வந்து கொண்டிருந்த நமது நண்பர்களின் முகத்திரை கிழிந்து தொங்கிக்கொண்டிருக்கிறது. உரிமை என்று நேற்றுவரை பேசியவர்கள் இன்று இரும்புகரம் கொண்டு ஒடுக்கவேண்டுமென பதிவிடுகிறார்கள். புரட்சி, கோபம் இது அசுர குணம் என்று பார்ப்பன குரலில் அலறுகிறார்கள். வன்முறை தீர்வல்ல என்று நமக்கு வக்கனையாய் போதித்துக்கொண்டே “நக்சல்பரிகளை கட்டிவைத்து எரிக்க வேண்டுமென” தங்களுக்குள் உரையாடிக்கொள்கிறார்கள். பிறப்பால் உயர்வு தாழ்வு பேதமை என பேசித்திரிந்தவர்கள் இன்று பிறப்பினை ஆய்வு செய்து கிசுகிசு அறிக்கை சமர்ப்பிக்கிறார்கள். ம.க.இ.க பார்ப்பனீயம் என்ற பதத்தையே 2000த்தில்தான் பயன்படுத்த துவங்கியது என அவதூறுகளையும் அவற்றோடு அள்ளித்தெளிக்கிறார்கள். நேற்றுவரை உற்ற நண்பர்களாய் ஒட்டி உறவாடிவிட்டு இன்று உக்கிரப்பார்வை பார்க்கும் நண்பர்களின் கோபத்திற்கு காரணம் என்ன? எளிமையானது. இந்த நாட்டினுடைய இயற்கை வளத்தையும் மனித வளத்தையும் சுரண்ட ஏகாதிபத்தியத்திற்கு தரகு வேலை பார்க்கும் மாமா வீரமணியை நமது தோழர். அசுரன், மாமா என்றே சொல்லியதுதான்.

ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக இழிவை போக்க ஆயிரமாயிரம் எதிர்புகளுக்கிடையில், கல்லடிகளுக்கும், சொல்லடிகளுக்கும் மத்தியில் பெரியார் கட்டியெழுப்பிய இயக்கத்தின் தலைமை பொறுப்பில் அமர்ந்து கொண்டு தரகு வேலை பார்ப்பதனாலேயே மாமா வீரமணி தன் தவறினை மறைத்துக்கொள்ள முடியாது என்று நாம் திரைகிழித்ததுதான் நண்பர்களின் கோபத்தை தூண்டியிருக்கிறது. ம.க.இ.க பெரிய புடுங்கிகளா என்று பேச வைத்திருக்கிறது.

நாம் வீரமணியை விமர்சிப்பது புதிதல்ல. ஊரையடித்து உலையில் போட்டு உடலேங்கும் நகையோடும் திமிரோடும் ஜெயலலிதா நடத்திய வளர்ப்பு மகன் திருமணத்தில் எச்சில் இலைக்கு அலையும் நாய் போல நமது மானங்கெட்ட வீரமணி நாக்கை தொங்க போட்டுக்கொண்டு சென்ற போது “வீரமணியும் வந்தாரு மானத்த மொய்யா தந்தாரு” என எள்ளி நகையாடி, மாமி ஜெயாவோடு கூடிக்குலவிய மாமா வீரமணியை அம்பலப்படுத்தியது அண்ணன் வர்றாரு என்ற ம.க.இ.கவின் ஒலிபேழை.

“நான் ஒரு பாப்பாத்தி” என்று சட்டமன்றத்திலேயே பேசிய சமூகநீதிகாத்த வீராங்கனை ஜெயலலிதாவை “பெண் பெரியார்” என்று வர்ணித்து மகிழ்ந்தவர்தானே இந்த மாமா வீரமணி.

எதிரியாவது நமது கண்களுக்கு முன்னால் காவிக்கொடியேந்தி தெளிவாக தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறான். இந்த துரோகியோ கருஞ்சட்டையோடு பெரியாரின் பின்னே ஒளிந்து கொண்டு பார்ப்பனீயத்தை வளர்த்துக்கொண்டிருக்கிறார். எவனோ கிளி ஜோசியனின் பேச்சை கேட்டு கொண்டு கண்ணகி சிலையை வீராங்கனை பெயர்த்தெறிந்த போது கற்பு-கண்ணகி என்றெல்லாம் ஆய்வு செய்து அதற்கு சித்தாந்த விளக்கம் கொடுத்தது யார்? மாமா வீரமணிதான். கண்ணகி சிலை அகற்றப்பட்ட காரணம் பெண்ணுரிமைதான் என்று பேசும் அளவிற்கு அப்பாவியா அவர்?

பெரியார் இறந்து போன இந்த 29 ஆண்டுகளில் என்ன பகுத்தறிவு பிரச்சாரம் செய்து புடுங்கியிருக்கிறார் இவர். பார்ப்பனத்தி வாஸந்தியை அழைத்து வைத்து தமது கல்லூரிகளிலே கருத்தரங்கம் நடத்தி கொண்டிருக்கிறார். பகுத்தறிவு சிந்தனைகளை பரப்புவதை விட வாழ்வியல் சிந்தனைகளை பரப்புவதில்தான் வேகமாய் இயங்குகிறார். ம.க.இ.க என்ன புடுங்கியது என கேட்கும் நண்பர்களே தமிழகம் முழுக்க எமது தோழர்களால் நடத்தபடும் ஆதிக்க சாதிவெறி எதிர்ப்பு போராட்டங்களிலும், இன்னும் ம.க.இ.க தோழர்களால் நடத்தப்படும் எத்தனைஎத்தனையோ போராட்டங்களிலும் செயலில் இறங்கி கைகோர்க்க புடுங்க திராணியில்லாத உங்கள் தலைவர். பெரியார் முழங்கிய வீரியமிக்க சொற்களை கூட காரியவாதத்தோடு மறந்துவிட்டாரே. அடக்குமுறைக்கு அஞ்சாமல் அந்த சொற்களை பேசவும் நக்சல்பாரிகள்தானே வந்து புடுங்க வேண்டியிருக்கிறது. பெரியார் சிலை உடைப்பின் போது நடைபெற்ற பூனூல் அறுப்பு சம்பவங்களை வன்முறை என்று கண்டித்தது இந்து முன்னனி. அதற்கு எதிராய் ஒரு வார்த்தை கூட பேசாமல் எங்கு போய் புடுங்கி கொண்டிருந்தார் உங்கள் தலைவரென்று கேட்டீர்களா?. அதற்கு கூட ம.க.இ.க வின் பொதுச்செயலர் மருதையன் தானே “அது வன்முறையைல்ல பூனூல் என்று எம்மை இழிவுபடுத்து ஆதிக்க கருத்தியலின் மெளனமான வன்முறைக்கு எதிர் வன்முறை, போர்” என்று இந்து முன்னனியின் கொழுப்பை புடுங்க வேண்டியிருந்தது. ஆனால் ம.க.இ.க தோழர்கள் திருவரங்கத்து கருவறையில் நுழைந்து கலகக்குரல் எழுப்பிய போதும், தியாகராஜ கீர்தனையில் போர்பறை இசைத்து முழங்கிய போதும் அதனையெல்லாம் வன்முறை என்று கண்டிக்க இந்த புடுங்கி மாமா வீரமணி ஒடோடிவந்துவிட்டார். அவர் இத்தனை முறை தன்னை எந்த பக்கமிருப்பதாக நிரூபித்தாலும் நண்பர்களே நீங்களே அவர் கருப்பு சட்டை கண்டு மயங்கும் அப்பாவித்தனத்தை மாற்றிக்கொள்ள மாட்டீர்களா? இதனை சொன்னால் ஏன் நண்பர்களுக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. பெரியாரையும் அவர் கொள்கையையும் காப்பதை விட இந்த சொறிநாயை காப்பதுதான் சரி என்று உங்கள் பகுத்தறிவு சொல்கிறதா?

இதனையெல்லாம் கேட்டால் நம்து நண்பர்கள் சொல்கிறார்கள் “அவர் என்னதான் மாமா வேலை பார்த்தாலும், ஒரு இயக்கத்தின் தலைமையை மாமா என்று சொல்வது தவறில்லையா” “தோழர்கள்!நீங்கள் சொல்கின்ற காரணங்கள் சரிதான் ஆனால் வார்த்தைகளின் வீரியத்தை மட்டும் கொஞ்சம் குறைத்துக்கொள்ளூங்களேன்” என்று நமக்கு அறிவுரை சொல்கிறார்கள். “பார்ப்பனர்” என்று பேசினால் அய்யர்களின் மனம் புண்படுமே அதனால் பிராமணர் என்று பேசுங்களேன் என்று பெரியாருக்கு யோசனைச்சொல்லி மூக்குடைப்பட்டு போனவர்களின் எண்ணிக்கையை கொஞ்சம் எண்ணிவிட்டு வாருங்களேன் என்று நாம் நண்பர்களுக்கு யோசனை சொல்கிறோம்.

“இந்தியாவிற்கு பகத்சிங்கின் கொள்கைதான் உண்மையாக வேண்டியது என்பது நம்து பலமான அபிப்பிராயமாகும். ஏனெனில் நாமறிந்த வரை பகத்சிங்கிற்கு சமதர்மமும், பொதுவுடைமையும்தான் அவரது கொள்கையென்று கருதியிருக்கிறோம்” என்று ஈரோட்டு கிழவன் தனது கூர்தீட்டிய வரிகளோடு வெள்ளை அரசின் அடக்குமுறையை குத்திக்கிழித்த காலம் ஒன்றுண்டு. இன்று உங்களிடம் பெரியாரின் குரலை நாங்கள் எதிர்பார்க்கவில்லையென்றாலும் நண்பர்களே, “நக்சலபாரிகளை ஒழிக்க வேண்டும், எரிக்க வேண்டும்” என்று அத்வானியின் குரலிலே பேசிக்காட்டி எங்களை அசத்துவீர்களென்றும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. பல நாட்களாய் வெளியில் உலவிய பார்ப்பனர்களை விமர்சித்து விமர்சித்து உங்கள் மூளையில் ஒளிந்திருக்கும் பார்ப்பனர்களை விட்டுவிட்டீர்களே. இந்த பயங்கரவாத பீதி கலைய பகத்சிங்கை தூக்கிலிட்ட போது பெரியார் வெளியிட்ட அறிக்கையை படியுங்கள். மாமா வீரமணியின் சகவாசம் விட்டுத்தொலையுங்கள்.

ஆனால் உங்கள் தலைவர்கள் போலவே நீங்களும் திடீரென்று எதையாவது புலனாய்வு செய்து புடுங்கிவிடுகிறீர்கள். அப்படி உங்கள் சமீபத்திய புலனாய்வு தோழர்.மருதையன் பிறப்பால் பார்ப்பனர் என்பதுதான் ஆனால் நண்பர்களே நீங்கள் இவ்வளவு பாமரத்தனமானவர்கள் என்று நான் நினைத்ததேயில்லை, ம.க.இ.கவின் நடைமுறையில் விமர்சனம் வைக்க முடியாத சில ஒட்டுண்ணிகள் இந்த வாதத்தை சிற்றிதழ் வட்டாரத்திலும், தமிழின குழுக்களுக்கிடையிலும் எழுப்பிவிட்டு வாங்கிகட்டிக்கொண்டு ஓடினார்கள் என்று உங்களுக்கு தெரியாதா? பாவம் நீங்களும்தான் என்ன செய்வீர்கள் இப்போது இது உங்களூக்கு புது செய்தி. சரி, மாமா வீரமணி நடைமுறையில் ஒரு பச்சைபார்ப்பான் என்று நிறுவிக்காட்ட எத்தனையோ காரணங்களை எம்மால் அடுக்க முடியும் தோழர்.மருதையனை பிறப்பைதவிர நடைமுறையில் அவர் பார்ப்பனர் என்பதற்கு உங்களால் ஒரே ஒரு காரணம் சொல்ல முடியுமா? “அவர் பிறப்பால் பார்ப்பனர் என்பதால் அப்படித்தானிருப்பார்” என்பதன் மூலமாக, வர்ணத்திற்கு ஒரு குணம் “பறை புத்தி அரை புத்தி” போன்ற இழிவான பார்பனீய வரையறைகளில் நின்று கொண்டுதானே உங்கள் மூளை இவ்வளவு கேவலமாய் வேலை செய்கிறது. வெளியில் பார்பனனை ஒழித்துக்கட்டுவதிருக்கட்டும் நண்பர்களே முதலில் உங்கள் மூளைக்குள் இருப்பவனை அடித்து துரத்துங்கள். கூடுதலாய் ஒரு கேள்வி உங்கள் வரையறையின் படி பதிவர் வட்டத்திலேயே எங்கள் தோழர்களிடம் வாங்கிகட்டி கொண்டு ஓடிய இந்து மதவெறியன் அரவிந்த நீலகண்ட நாடாரும், அர்த்தமுள்ள இந்துமதமெழுதிய கண்ணதாசன் செட்டியாரும், பெள்ளாச்சி மகாலிங்க கவுண்டரும் தமிழர்களா? திராவிடர்களா?

இன்னும் சில நண்பர்களுக்கு நம் மீது கோபம் நாம் வெகுமக்களூக்கிடையில் பணி செய்யவில்லையாம்। இதற்கும் உங்களையே குறை சொல்லும் நிர்பந்தத்தை எனக்கு ஏற்படுத்திவிட்டீர்களே நண்பர்களே. தினமலர், தினமணி போன்ற செய்திதாள்களின் கட்டம் கட்டிய செய்தியிலிருந்து உங்கள் பொது அறிவை மீட்டு அதனை வெகுசனங்களுக்கு இடையில் முதலில் இறக்கி விடுங்கள். பேருந்துகளிலும் இரயில்களும் மக்கள் கூடுமிடங்களிலும் கூர்மையான அரசியல் விமர்சனத்தோடு “புதிய ஜனநாயக்த்தையும்” “புதிய கலாச்சாரத்தையும்” விற்கும் எமது தோழர்களின் குரலை ஒருமுறையாவது கேளுங்கள். பிறகு பேசுங்கள்.

“சிலையை உடைத்ததன் மூலம பெரியாரை தமிழகம் முழுவதும் கொண்டு செல்வதற்கான ஒரு அற்புதமான வாய்ப்பைத் தங்கத்தட்டில் வைத்துவழங்கினார்கள் இந்து மதவெறியர்கள்। உடைக்கப்பட்ட பெரியாரின் தலையை தமிழகம் முழுவதும் ஒரு வெடிகுண்டைப்போல ஏந்திச் சென்றிருக்கலாம். தன் வாழ்நாள் முழுவதும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து மறைந்த அந்த கிழவனை இன்னொரு முறை மக்கள் மத்தியில் பிரச்சாரப்பயணம் அழைத்துச்சென்றிருக்கலாம் “மண்டைச் சுரப்பை உலகு தொழும்” பாரதிதாசன் பாடினாரே அந்த தலையிலிருந்து தோன்றிய சிந்தனையை இளம் தலைமுறையினர் மத்தியில் தீயை போல பற்றவைத்திருக்கலாம். பேசாத கல்லையும், களிமண்ணையும் வைத்து அரசியல் நடத்தும் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு, பகுத்தறிவுக்கல்லை பேசவைத்துக்காட்டியிருக்கலாம்.” என்று பெரியார் சிலை உடைப்பின் போது பொறி பறக்க எழுதியது “புதிய ஜனநாயகம்” உங்கள் புடுங்கித்தலைவர்களோ ஏ.சி ரூமில் உட்கார்ந்து தங்களுக்குள் விவாதித்துவிட்டு அமைதிகாக்குமாறு அறிவுரை சொன்னார்கள். பூனூலை காக்கமட்டும் ஓடோடி வந்தார்கள். சொல்லுங்கள் நண்பர்களே இதில் எது வெகுசன நடவடிக்கை.


நேற்றுவரை எம்மோடு கூடியிருந்தீர்கள் இன்று விமர்சனம் என்றவுடன் வெகுண்டெழுந்து அடக்க வேண்டும் ஒடுக்க வேண்டும் என்று கூச்சலிடுகிறீர்கள்!! நாங்கள் நேச சக்தி எங்களை விமர்சிக்கலாமா என்று விழுந்து புரள்கிறீர்கள், இந்த தேசம் அடகு வைக்கப்படும் போது, எமது உழைக்கும் மக்களின் வாழ்வு சூறையாடப்படும் போது அதற்கு ஆதரவாய் நிற்கும் எந்த சக்தியையும் எதிர்க்கத் தயங்காது நண்பர்களே எமது குரல்கள். இது ஒடுக்குமுறையை ஒழித்துக்கட்ட வீறிட்டு வெடிக்கும் அசுர கானம் எந்த ஆதிக்கத்தாளத்திற்கும் அடிபணியாது. “கட்டபொம்மன் போராட தொடங்கும் வரை எட்டப்பன் கட்டபொம்மனின் உற்ற நண்பன், கட்டபொம்மன் போராட துவங்கும் போதுதான் எட்டப்பன் வெளிப்பட்டான்” என்று ஒரு கூட்டத்திலே தோழர். மருதையன் குறிப்பிட்டதாக நினைவு. இன்றும் பாருங்களேன் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கட்டபொம்மனின் வாரிசுகளாய் களத்தில் நிற்கிறோம் நாங்கள், தூக்கில் தொங்கவும் தயார், கட்டி எரிக்கப்பட்டாலும் எங்களுக்கு கவலையில்லை, ஆனால் நாங்கள் போராடத்துவங்கும் போதுதான் “அசுரர்களை அடக்க வேண்டும் ஒடுக்க வேண்டும்” என்று தேவர்களின் குரலில் பேசிகொண்டே எட்டப்பன்கள் வெளிவருகிறார்கள்.

Anonymous said...

\\எப்படியோ மாநகரத்தில் தனியார் மயத்திற்கு எதிராக போராடியது சி.பி.எம். என்று ஒத்துக் கொண்டீர்களே அதற்கு கோடி நன்றிகள்...

காட்டுக்குள் இருக்கும் புரட்சியாளர்களுக்கு புழுதி வாரித் தூற்றுவதைத் தவிர வேறு ஒன்றும்அவர்கள் கழட்டுவதில்லை. மேலும் இடஒதுக்கீட்டுக்கே எதிரானவர்கள் அவர்கள். எனவே தலித் மக்களின் முன்னேற்றத்தில் அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. இடஒதுக்கீட்டில் அதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை என்ற மூன்றாவது நிலை எடுத்த அதி மேதாவிகள். இதையெல்லாம் நீங்கள் பார்ப்பனீம் என்று கூறினால் தடியெடுத்துக் கொண்டு அலைவார்கள்//



சந்திப்பு ரொம்ப ஒளராத;

நாட்டை விற்க்கும் காங்கிரசு துரேகிகளுக்கு கோவனமும் நீங்கள் தான்,
ஜட்டியும் நீங்கள் தான் என்பது ஊரெ நாறி நாற்றமெடுக்கும்
விசயம் அப்புறம்
என்ன வெங்காயத்துக்கு தனியார்மய எதிர்ப்பு வேசம் போடுற நீ.

தனியார்மய தாசர்கள்.
------------------------
சாதி ஒடுக்குமுறையை பற்றி பேச சந்திப்பு உனக்கு துளி கூட
அருகதையே இல்லை ஏன்னென்றால் உன்னுடைய கட்சியில் சாதி
வெறியன்களும்,கட்டப்பஞ்சாயத்து ரவுடிகளும் இல்லை என்று சொல்ல முடியுமா
உன்னால் ?

உதாரனத்திற்கு நான் ஒரு அண்னனை சொல்கிறேன் அவர் KK நகர் DYF1
தலைவர் காமராஜ்,அவ்ருடைய வேலையே கட்டப்பஞ்சாயத்து செய்வது தான்.

அப்புறம் நம்ம மேற்கு வங்க "தோழர்",
அதான் நான்
முதலில் பாப்பான் அப்புறம் தான் கம்யூனிஸ்டுனு சொன்னாரில்ல
அந்த "தோழர்"

எனவே சந்திப்பு ஒன் கட்சி இருக்கிற லட்சணத்தில் நீ சாதி பற்றியெல்லாம்
பேசவே கூடாது.

லும்ப்பன் பார்ட்டி ஆப் இந்தியா
----------------------------

ம.க.இ.க இடஒதுக்கீட்டை எதிர்க்கிறது என்று சொன்னாயே உன்னிடம்
எந்த முட்டாள் அப்படி சொன்னான்?
சரிசரி CPM முட்டாளாகத்தானிருக்க வேண்டுமென்பதில்லையே!

அறிவு கெட்ட சந்திப்பே ஆளும் கும்பலுக்கு தரகு வேலை செய்யும்
உன்னுடைய கட்சி தான் இடஒதுக்கீட்டை எதிர்க்கிறது,
உன்னுடைய
கட்சி எடுத்திருப்பது ஒரு நிலைப்பாடு அந்த கேடுகெட்ட நிலைப்பாட்டை
விளக்க உன் தலைவர்களுக்கு அறிக்கை ஒரு கேடு?

உன் கட்சியிலுள்ள மீசை முறுக்கும் வீரருக்கும் [தோழருக்கு] இட ஒதுக்கீடு
கீழ் வெண்மனியை சாம்லாக்கியவர்களுக்கும்,
லீலாவதியை கூறு போட்டவர்களுக்கும் கூட இட ஒதுக்கீடு வேண்டுமோ ?

ஆனால் நீ அதற்கும் மேலே போய்
வறலாற்றில் என்னுடைய பாட்டன் முப்பாட்டனுடைய
நாக்கை அறுத்தவனுக்கும்,காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியவனுக்கும்
கூட இட ஒதுக்கீடு தர வேண்டும் என்கிறாய்.

இட ஒதுக்கீட்டில் இப்படிப்பட்ட ஒரு அயோக்கியத்தனமான
நிலைப்பட்டை வைத்துக்கொண்டுள்ள நீ
ம.க.இ.க வை பார்த்து பேசுகிறாயா ?

போ,போய் ஒழுங்கா இட ஒதுக்கீடு பற்றிய ம.க.இ.க வின்
வெளியீடை
மறுபடியும் ஒரு முறை தெளிவாக படிச்சுட்டு வந்து பேசு.


அப்புறம் எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் சந்திப்பு ?

நீ ஆறறிவுள்ள மனிதனா இல்லை கிளியா !

காடு,துப்பாக்கின்னு சொன்னதையே சொல்லிக்கிட்ருக்கியே
அதான் கேட்டேன்,

ஒன்னு பன்னலாம் ஒன் செல் நம்பரை போடு நான்
வந்து ஒன்னையெ எங்க ஆபிசுக்கே
கூட்டிட்டு போய் காட்டுறேன்.

அதே போல அவதூறு சேற்றை வாரியிரைக்கிறார்கள்
என்பதும் கூட உனக்கு
மனப்பாடமாகிவிட்ட ஒரு சொற்றொடர்.

நீயும் உன் கட்சியும் அவதூறு
செய்யுமளவுக்கு யோக்கிய
சிகாமனிகள் என்கிற நினைப்பா உனக்கு ?

கோமாளி சந்திப்பே கேட்டுக்கொள்

உன்னுடைய கட்சியையும்,திரிபுவாத ஆளும் வர்க சித்தாந்தத்தையும்
சுக்கு நூறாக உடைத்தெறிவது தான் புரட்சிகர சக்திகளின் முதல் வேலை,
நீயும் பார்க்கத்தானே போகிறாய்,
பார்ப்பது மட்டுமின்றி
பேசவும் செய்வாய் கைகூலியின் குரலில்,
நாங்களும் பார்ப்போம்
ஆனால் பேசிக்கொண்டிருக்கமாட்டோம்
கைக்கூலிகளிடம்.