Sunday, March 4, 2007

நீரைத் தேடும் கண்கள்

கண்களில் நுழையும் காட்சிகள்
மூளையில் விழுகிறது ஆனால்
மனமோ இறுக மூடிக் கிடக்கிறது...

வாக்குத் தவறும் வானத்திடமும்
விளைந்ததை வாங்கத் தவறும் அரசுடன்
மாரடித்து எனக்குச் சோரிட்டவன்
வாசனையால் வயிறு நிறப்புகிறான்...
வெட்கமில்லாமல் வெளியேறுகிறது
புளியேப்பம் - என்னிடமிருந்து

போதையில் செறுகும் கண்களில்
கண்ணீர் கூட வற்றிப் போய் விட்டதோ..
தாமதமாகத் தேடுகிறேன் சிகிச்சையை.