பெய்யெனப் பெய்கிறது மழை
குரல்வளையை கடக்கும் தேனீரின் இளஞ்சூடு
உயிரின் ஆழம் வரை ஊடுருவிச் செல்கிறது..
என் சாளரத்தினூடாய்த் தெரியும் சாலையில்
சிதைந்ததோர் ஓவியமாய் விரிகிறது
எதிர்கால இந்தியா....
மழைக்காய் கூரைக்கு வெளியே ஒதுங்கிய
பொடியன்களின் காகிதக் கப்பல்கள்...
மூழ்கும் கப்பல்களோடு சேர்ந்து மூழ்கும்
வல்லரசுக் கனவுகள்!
நிலவுக்குப் பறக்கிற ராக்கெட்டை
கூரைப் பொத்தல்கள் வழியே ரசித்துப் பார்க்கும்
நாளைய இந்தியா...
சூடு பரவுகிறது.. இப்போது கண்களில்!
Showing posts with label மழை. Show all posts
Showing posts with label மழை. Show all posts
Thursday, June 7, 2007
Subscribe to:
Posts (Atom)